31/08/23 அன்று மகாபலிபுரம் திருவிடந்தை ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் தேர் பற்றும் உரிமை கொண்ட பரதவர் பட்டினவர்கள், தமிழ் பேரரசர் இராச ராச சோழர் ஆணைக்கிணங்க கொண்டாடிய ஆவணி சதய திருவிழாவினை "பட்டினவர் பெருவிழா "
மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர்.எஸ்.ஜெயச்சந்திரன் அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு சாரதா தேவி மேல்நிலைப் பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கு பெற்றபோது
எனது அருமை நண்பர் மரியாதைக்குரிய திரு.ஆனந் சாகு( Anand sahu) புது டெல்லி அவர்களுடன் காஞ்சிபுரத்தில் உள்ள தெய்வத்தாய் காஞ்சி காமாட்சி அம்மன் தரிசனம் செய்த போது.
பரதவர் முன்னேற்றப் பேரவையின் அமைப்பு செயலாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்களின் கோயம்புத்தூரில் நடைபெற்ற இல்லத் திருமண விழாவில் பரதவர் முன்னேற்றப் பேரவையின் நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது.
நான் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உய்யாலிகுப்பத்தின் மக்கள் நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நமது பரதவர் வழித் தோன்றல் ஆளுமைகளின் பெயர்களை தங்கள் கிராமத்தில் உள்ள 28 தெருக்களுக்கு ஒவ்வொருவர் பெயராக சூட்டியுள்ளனர்.
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் அவர்களை டாக்டர் எஸ். ஜெயசந்திரன் அவர்களுடைய இளைய மகன் டாக்டர். சரத் ராஜ் ஜெயச்சந்திரன் எம்பிபிஎஸ் எம்டி, டாக்டர்.எம்.டி தயாளன், வன்னிய ராஜன், பாலாஜி, சேவியர், ஆகியவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தப்போது
என்.ஜீவரத்தினம் அவர்களுடைய நினைவிடத்தை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர் அவர்கள் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து 26/03/2023 அன்று மாலை திறப்பு விழா செய்தார்கள்.
17/03/2023 எனது பிறந்தநாள் அன்று என்னை நேரில் சந்தித்தும் தொலைபேசி, வாட்சப், பேஸ்புக் instagram போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மீது பாசம் கொண்ட நட்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
10.02.2022 அன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு பரதவர் முன்னேற்றப் பேரவை தலைவர் டாக்டர்.எம்.டி. தயாளன் பரதவர் முனைவர் முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் என்ற நூலை பரிசாக வழங்கிய போது.
28/11/2022 செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் இடையே அமைய உள்ள மீன்பிடி துறைமுகத்தின் பணியை உடனடியாக மீனவர்களின் நலம் சார்ந்து தொடங்கிட வேண்டும் என விழுப்புரம் மாவட்டத்தில் ECR உள்ள அனுமந்தை பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த போது