பரதவர் முன்னேற்றப் பேரவையின் சார்பாக மரியாதைக்குரிய முன்னாள் மின்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு D. ஜெயக்குமார் B,sc,.BL, அவர்களை நேரில் சந்தித்து சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் முனைவர் முத்து கண்ணப்பர் எழுதிய நூலை அவருக்கு பரிசாக வழங்கிய தருணம்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பரதவர் முன்னேற்றப் பேரவையின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தலைவர் டாக்டர்.எம்.டி தயாளன்பரதவர் அவர்களின் ஆணைக்கிணங்க ராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்திருக்கும் மரியாதைக்குரிய திரு.ஆனந்த் சாகு அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தோம்
புதுடெல்லியில் இருந்து வருகை புரிந்த அருமை நண்பர் மரியாதைக்குரிய திரு. ஆனந்த் சாகு அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் தேசிய தலைவர் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து வரவேற்றபோது.
3.7.2022 அன்று இந்திய மீனவர் சங்கம் மற்றும் பரதவர் முன்னேற்றப் பேரவையின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாக்குறிச்சி மீனவர் கிராமத்துக்குச் சென்று இந்திய மீனவர் சங்கம் மற்றும் பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாக நிர்வாகத்தை கட்டமைப்பது நிர்வாகப் பொறுப்பில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது போன்ற விஷயங்களை உரையாற்றி வந்தபோது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள ஐநா சபையில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய மானியங்களை நிறுத்துவது சம்பந்தமான தீர்மானத்தை எதிர்ப்பு தெரிவித்து தாயகம் திரும்பிய என்னை வாழ்த்தியப்போது.
இன்று சுசர்லாந்து நாட்டிலுள்ள ஐநா சபையில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய மானியங்களை நிறுத்துவது சம்பந்தமான தீர்மானத்தை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவிலிருந்து மீனவப் பிரதிநிதிகள் வந்து நமது நியாயமான கோரிக்கையை ஐநா சபையில் நேற்று முன்வைத்தோம்.