நான் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் எனது ஜனநாயக கடமையும் எனது உரிமையுமான 19/04/24 நாடாளுமன்ற தேர்தலில் என்னை மதித்து நேரில் சந்தித்து ஆதரவு கோரிய வேட்பாளருக்கு எனது வாக்கை பதிவு செய்தேன்.
எனது பிறந்தநாள் 17/03/2024 அன்று என்னை நேரிலும், தொலைபேசியிலும், முகநூலிலும், சமூக ஊடகங்களிலும், வாழ்த்தி தங்களின் அன்பை வெளிப்படுத்திய அன்பு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
07/01/2024 சென்னை இராயபுரத்தில் டாக்டர் சரத்ராஜ் ஜெயச்சந்திரன் தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்று அதில் பங்கு பெற்றப்போது..
மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட எண்ணூர் முல்லை நகர் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர், பால் பாக்கெட் பிஸ்கட் உணவு வழங்கிய போது திரு.டாக்டர்.சரத்ராஜ் ஜெயச்சந்திரன், திரு.வன்னிய ராஜன், அவர்களுடன் நான்.
மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட காசிமேடு சிங்காரவேலர் நகர் பகுதி மக்களுக்கு உணவு வழங்கிய போது திரு.டாக்டர்.சரத்ராஜ் ஜெயச்சந்திரன், திரு.வன்னிய ராஜன், திரு.சங்கர் அவர்களுடன் நான்.
11/11/2023 இன்று சுயமரியாதை சுடரொளி ந. ஜீவரத்தினம் அவர்களுக்கு ராயபுரத்தில் அமைந்துள்ள அவருடைய மணி மண்டபத்தில் பரதவர் முன்னேற்றப் பேரவை நிர்வாகிகளுடன் ஐயா அவர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று சாகர் பரிகிரமா IX 2023 நிகழ்ச்சி மத்திய மீனவளத்துறை அமைச்சர் மாண்புமிகு பர்ஷோத்தம் ரூபாலா ஜீ அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் நடைபெற்றது.